கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

சித்திரமே வாராயோ……..

இரா.விஜயகௌரி
அஞ்சு வண்ண சித்தரமே
அழகான பேரொளியே
குஞ்சு மகள் உன் வரவை
கூடி நின்று தேடுகின்றோம்

கருவறையில் உன் நடனம்
களித்திருந்து பேசுகின்றா்ய
ரசித்தெழுந்து உரசுகின்றாய்
கணங்களுக்கும் பொருள் நிறைத்தாய்

எதிர்பார்ப்பை விதைத்து விட்டு
காத்திருப்பில். எங்கள் உலா
கனவினிலே வாழ்வெழுதி
கண்மணியாய் வளருகின்றாய்

எங்கள் சித்திரத்து பொற்சுடரே
சீரெழுதும் கனிமொழியே
உற்சவத்தின் பெருந்தேரில்
உலவ வரும் தேவதையே

காத்திருந்து தேடுகின்றோம்
கண்மணியே. வாராயோ
மணிவயிற்றை விட்டகன்று
மலர்மடியில் கொஞ்சியெழ……..

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading