சிறு வயதில்

ஜெயம் தங்கராஜா

பெத்தவரின் அருகினிலே வளர்ந்திட்ட பருவம்
சுத்தமான மனத்தை காவித்திரிந்த உருவம்
கற்றுக்கொண்டே பாசத்தை உருண்டிட்ட உலகு
பெற்றுக்கொண்ட நேசத்திற்கோ இல்லையொரு அளவு

புன்னகை என்பதோ அப்பழுக்கற்று இருக்கும்
எண்ணில்லா ஆனந்தத்தை உள்ளமும் பெருக்கும்
சின்ன மனிதர்களின் அழகான உலகம்
உண்மையான உணர்வதனால் இல்லையொரு கலகம்

பாடசாலை பாடங்களை பதிந்திடவே படித்து
ஆடல் பாடலுடன் விளையாடி ஓடிப்பிடித்து
அப்பாவித்தனமாக அப்போதைய சிறுபராய நிகழ்வு
இப்போதும் மீட்டெடுத்து அசைபோடுகையில் மகிழ்வு

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading