நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சிறு வயதில்

ஜெயம் தங்கராஜா

பெத்தவரின் அருகினிலே வளர்ந்திட்ட பருவம்
சுத்தமான மனத்தை காவித்திரிந்த உருவம்
கற்றுக்கொண்டே பாசத்தை உருண்டிட்ட உலகு
பெற்றுக்கொண்ட நேசத்திற்கோ இல்லையொரு அளவு

புன்னகை என்பதோ அப்பழுக்கற்று இருக்கும்
எண்ணில்லா ஆனந்தத்தை உள்ளமும் பெருக்கும்
சின்ன மனிதர்களின் அழகான உலகம்
உண்மையான உணர்வதனால் இல்லையொரு கலகம்

பாடசாலை பாடங்களை பதிந்திடவே படித்து
ஆடல் பாடலுடன் விளையாடி ஓடிப்பிடித்து
அப்பாவித்தனமாக அப்போதைய சிறுபராய நிகழ்வு
இப்போதும் மீட்டெடுத்து அசைபோடுகையில் மகிழ்வு

Nada Mohan
Author: Nada Mohan