16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1884
கவிதை….!❤️
கவிஞன் ஒருவன்
கருவொன்று சுமந்து
கதையாக்கித் தந்திடும்
விதையென அதுவே பலர்
மனத்திடை நிலைத்திடும்
கல்லாக் கலையென்பர் சிலர்
கொல்லும் வலியும் கோடி
தொலைவில் செல்லும் எனில்
கவி சொல்லும் கவிஞன் பலர்
உளத்தை வெல்வான் என்பேன்
அழகுடைக் கவியென ஈங்கு
அளித்திடும் பொருள் நயம்
விழித்திட வைத்திடும் தினம்
விழி விலக்காது படித்திடவே
தூண்டுமே நம் மனம் கணம்
ஆதி இலக்கிய வடிவாய்
அன்று சங்க காலம் முதல்
யாப்பு மரபினில் கலந்தே
அந்நியர் வருகை பின்
நவீன கவியென உரை
நடையென பலவாகி
இன்று என் உளத்தாள்
நிறைத்து நின்றேகும்
கலை விலை இல்லை…❤️
சிவதர்சனி இராகவன்
15/10/2023

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...