சிவந்த மே

சிவதர்சனி

தினக்கவி 1979..!

சிவந்த மே..!

உறவுகளின் உருக்கமான
குரல் ஒடுக்கப்பட்டது
உன்னத உயிர்கள் பலி
கொள்ளப் பட்டது
ஒன்றா இரண்டா ஆறிட
ஆயிரங்கள் பற்பலவாய்
ஓலங்கள் கேட்ட போதும்
உதவும் மனதோடு இல்லை
யாருமே அருகிலே
இன்றும் அந்த வடுக்களை
சுமந்தே வாழும் இதயங்கள்
காணாமல் போனோர்
நிலை தெரியாது தவிக்கும்
பெற்றோருக்கு எப்படித்தான்
ஆறுதல் சொல்லுவது
ஆண்ட இனம் அழிக்கப்பட
அல்லலுற்று உடல் சிதைக்கப்பட
போதும் இன்னும் வேண்டாமே
வேண்டும் குற்றத்துக்கு நீதியே..
சிவதர்சனி இராகவன்
16/5/2024

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading