சிவரஞ்சினி கலைச்செல்வன்

மாவீரரே!
சந்தம் சிந்தும் சந்திப்பு
என்பத்து மூன்று முதலாக
இயக்கங்கள் எழுந்தன பலவாக
ஒன்றாய் இருந்தவர் இயக்கமென்று
ஒருவருக்குள் மோதல் யார் பெரிது என்று
பல்வேறு இயங்கம்
தொடங்கியது
பற்பல தாக்குதல்
நடத்தியது
இயக்கத்துடன் இயக்கம் மோதியது
இறுதியில் புலி மட்டும் எஞ்சியது
தரைபடை கடற்படை
அதன் அமைத்து
தரமாக வான் படை
ஒன்றமைத்து
எதிரியின் பல முனை தாக்குதலில்
இழந்தோம் விடுதலை
போர் திறனை
ஆளை ஆள் பிழை சொல்லி
ஆவதென்ன
அனைவரும் மாவீரர்
அஞ்சலிப்போம்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading