சிவரூபன்சர்வேஸ்வரி.

மனிதம் வாழும்..!

மனிதன் பிறப்பு மனிதம்
விளங்கும்.
மான்புடன் என்றும் சிறந்து ஓங்கும்..

கடமையுணர்வு கண்ணியம் பெற்று.
காலத்தால் அவன் மனிதம் வாழும்.

சத்திய நெறியை சரித்திரமாய்க் கொண்டு

சுத்தமான நெஞ்சுடன் நிமிர்ந்து.
சாதனை படைக்கும் திறமையும் பூண்டு.

சாந்தகுணத்திலே மனிதம் வாழும்.

சொன்ன சொல்லை நிவர்த்தி செய்யும்.
சொல்வேந்தர் இன்னாட்டில் தேவை.

சோதி நிலையில் நின்றொளிரும்.
செயலில் நல்ல மனிதம் வாழும்.

தலமையென்பது தலையாய கடமை.
தரத்தின் மதிப்பு பெறுமதியானது.
தன்னொளி வீசும் கதிரவன் போன்று.
தனித்துவமாய் நடப்பதில் மனிதம் வாழும்.

– கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading