நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

நேசத்தின் ஆர்ப்பரிப்பில் நெஞ்சம் சிலிர்க்கிறதே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

கண்ணும் கதைபேசும் காதலின்பம் கூடும் //
மின்னும் கதிரொளியே மிளிர்ந்தாய் என்னகம் //
வீசும் தென்றலே எனது சுவாசக்காற்றே //
வாசமலரே மிகையாக வந்தவளே நீயும் //
சிலையாக எனதுள்ளம் சிலநொடியில் கரைந்ததே //
உருக்கியும் வார்த்தானோ ஊடுருவிப் பாய்கிறாயே //
பெருக்கி விட்டாய் பெருமையும் கிடைத்ததடி //
நேசத்தின் ஆர்ப்பரிப்பில் நெஞ்சமும் சிலிர்க்கிறதே //
பாசத்தின் நிலையை பாங்காய் பரப்பினாய் //

ரீங்காரம் இடும் வண்டாகினேன் பூங்கொடியே //
ஆங்காரம் இன்றியே அணைப்பேன் கண்ணே //
சங்கீதமாய் சந்தோசமாய் வாழ்வோம் என்றுமே //

தங்கக் குடமே தளராத தளிரே //
வங்கக் கடலிலே விளைந்த வலம்புரியே //
சிங்கப் பெண்ணே செவ்விதழ் தேனே //
சீராட்ட வந்தவளே சிவகங்கையும் நீதானோ //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan