பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 260 ]
“பணம்”

பணமின்றி வாழமுடியாத இன்றைய உலகம்
பசிக்கு உணவும் படுக்க இடமில்லா அவலம்
பணமின்றி அன்றைய மனிதன் பண்டமாற்றின் அதிசயம்
பாடுபடு,சோம்பலறு! அடைவாய் பணப்புழக்கம்

பணம் என்னடா பணம்? குணம்தானடா நிஜம்
பசித்த வயிற்றுக்கு பால் ஊற்றுமா குணம்?
வேண்டாமே இந்த வேதாந்தம்! முயன்றுதேடு சுகம்
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே,காண்கிறாய் நிதம்

மிதிபடுபவன் கூட பணம்வந்தால் மதிக்கப்படுகிறான்
இல்லாதவன் வாய்ச்சொல் இல்லாளும் கேளாள்
ஈன்றெடுத்த தாயும் தேடாள்
முயற்சி திருவினையாக்கும்,இலட்சுமி கடாட்சம் தருவாள்

பணமே சாதனை செய்யுங்கூரிய ஆயுதம்
தனியொருவர் முதல் அரசுவரைகையாளும் சூட்சுமம்
பிறருழைக்க அதில் சவாரி செய்தலே இவர்களது சுபாவம்
பெற்ற தாயையும்விற்கத்துணிந்தவர், பணம்படுத்தும் பாடாம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading