” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 260 ]
“பணம்”

பணமின்றி வாழமுடியாத இன்றைய உலகம்
பசிக்கு உணவும் படுக்க இடமில்லா அவலம்
பணமின்றி அன்றைய மனிதன் பண்டமாற்றின் அதிசயம்
பாடுபடு,சோம்பலறு! அடைவாய் பணப்புழக்கம்

பணம் என்னடா பணம்? குணம்தானடா நிஜம்
பசித்த வயிற்றுக்கு பால் ஊற்றுமா குணம்?
வேண்டாமே இந்த வேதாந்தம்! முயன்றுதேடு சுகம்
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே,காண்கிறாய் நிதம்

மிதிபடுபவன் கூட பணம்வந்தால் மதிக்கப்படுகிறான்
இல்லாதவன் வாய்ச்சொல் இல்லாளும் கேளாள்
ஈன்றெடுத்த தாயும் தேடாள்
முயற்சி திருவினையாக்கும்,இலட்சுமி கடாட்சம் தருவாள்

பணமே சாதனை செய்யுங்கூரிய ஆயுதம்
தனியொருவர் முதல் அரசுவரைகையாளும் சூட்சுமம்
பிறருழைக்க அதில் சவாரி செய்தலே இவர்களது சுபாவம்
பெற்ற தாயையும்விற்கத்துணிந்தவர், பணம்படுத்தும் பாடாம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan