பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 265 ]
“குருதிப்புனல்”

போராடிப்பெற்ற சுதந்திரமோ மா வரம்
அதில் தந்திரம் கலந்துவிட்டால் மிகஅனர்த்தம்
குருதிப்புனலில் மாவீரர் இன்னுயிரோ அமர்ப்பணம்
கொள்கை மாறா வேள்வியிலே யாவும் சமர்ப்பணம்

குருதிப்புனலில் நனைந்த நாடுகளுக்கு உதாரணம்
எங்கள் தாயகமும் அராபிய வளைகுடாவில் பலஸ்தீனமும்
சமாதானப்புறா இங்கு பறப்பது அசாதாரணம்
இசைந்து வாழும் விலங்குகளும் இடையே மூர்க்கமாய்ப்போராடும்

மோதிய களைதீர்ந்தபின் பகைமறந்து குலாவி மகிழும்
இவைகண்டும் திருந்தாத மானிடா! இனி என்றுன் குருதிப்புனல் தீரும்?
பரிணாம வளர்ச்சிகூட உனை அண்ட நாணும்
பல்லின மக்கள் வாழும் நாடுகள் உலகில் அநேகம்

இலங்கையில் மட்டுமேன் இந்தமாறா இனக்குரோதம்?
இயக்கரின் மரபணுக்களுக்கு உவந்ததா இரத்த வாசம்?
அன்புபோதிக்கும் பௌத்தம் இங்கே ஆடுது இரத்ததாண்டவம்.
அரசியல் நாடகம் நடாத்தும் ஆட்சியாளர் போடுகிறாரா இரட்டை வேடம்?

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading