பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை
வாரம்:220
02/05/2023
“நடிப்பு”

பரந்து விரிந்த விந்தை உலகமிது
போராட்டமே வாழ்க்கையான காலமிது
உயிர் தப்பி வாழ்வதற்கு வேண்டும் நடிப்பு
உயிர்கள் யாவற்றுக்கும் பொருந்தும் நியதியது

படமெடுத்தாடும் பாம்பின் உயரிய நடிப்பு
செத்ததுபோல் நடிப்பது மானின் சிறப்பு
நிறம்மாறும் ஓணானின் நவரச நடிப்பு
நரிக்குணம் கொண்டோரின் தந்திர நடிப்பு

அடம்பிடிக்கும் குழந்தையின் அசராத நடிப்பு
அன்பாலே அரவணப்பது தாயின் பொறுப்பு
உள்ளதின் வேதனை உதட்டில் காட்டாத நடிப்பு
உண்மையாய் வாழ்வதே உயர்ந்த மதிப்பு

ஓப்பனையில்லா முகத்திலும் மிளிரும் நடிப்பு
ஓப்பனையிருந்தும் மிளிராது பலருக்கு நடிப்பு
சமாதானப் புறா நோர்வேயின் உலகமகா நடிப்பு
அணைந்து போனது ஈழவிடுதலையின் நெருப்பு

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
27-04-2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading