மாறியதே வாழ்க்கை

நகுலா சிவநாதன் மாறியதே வாழ்க்கை மாறியதே வாழ்க்கை மனம்போன போக்கிலே! கூறியதே கதைகளும் குழம்பிய குட்டைகளாய் வெப்பத்தின் அதிகரிப்பாய் வேறிட வாழ்க்கையும் இன்று தெப்பமாய்...

Continue reading

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை
வாரம்:220
02/05/2023
“நடிப்பு”

பரந்து விரிந்த விந்தை உலகமிது
போராட்டமே வாழ்க்கையான காலமிது
உயிர் தப்பி வாழ்வதற்கு வேண்டும் நடிப்பு
உயிர்கள் யாவற்றுக்கும் பொருந்தும் நியதியது

படமெடுத்தாடும் பாம்பின் உயரிய நடிப்பு
செத்ததுபோல் நடிப்பது மானின் சிறப்பு
நிறம்மாறும் ஓணானின் நவரச நடிப்பு
நரிக்குணம் கொண்டோரின் தந்திர நடிப்பு

அடம்பிடிக்கும் குழந்தையின் அசராத நடிப்பு
அன்பாலே அரவணப்பது தாயின் பொறுப்பு
உள்ளதின் வேதனை உதட்டில் காட்டாத நடிப்பு
உண்மையாய் வாழ்வதே உயர்ந்த மதிப்பு

ஓப்பனையில்லா முகத்திலும் மிளிரும் நடிப்பு
ஓப்பனையிருந்தும் மிளிராது பலருக்கு நடிப்பு
சமாதானப் புறா நோர்வேயின் உலகமகா நடிப்பு
அணைந்து போனது ஈழவிடுதலையின் நெருப்பு

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
27-04-2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading