இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

செல்லாக்காசு -77

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-06-2025

வண்ணப் பெண்ணவளாய்
வாஞ்சையோடு உலாவருவாள்
குடும்பமென அர்ப்பணித்து
குலவிளக்காய் சுடர்விட்டாள்

வாழ்நாள் முழுதும் உழைத்து
வானம் பாடியாய் கழித்தாள்
தலை முடியின் வெண்மை
தலைமுறையின் காலம் சொல்ல

கைத்தடியின் கைப்பிடிப்போ
காலத்தின் ரகசியம் உணர்த்த
மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பு தொலைந்து
மௌனம் அரவணைக்க

செல்லாக்காசென மனம் தளர
சேகரித்த கதை கேட்போருமில்லை
காலச்சக்கரத்தில் முதுமையொரு வரம்
கலங்கலாமா அனுபவ பொக்கிஷம்!

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading