செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம் பாவையண்ணா!
பசுமை
“””””””
பசுமையெங்கும் பரந்திலங்கப் பாட்டாளி உழைத்திடுவான்
பசும்புற்கள் படர்நிலத்தில் பசுக்களெலாம்
பசிபோக்கும்
விசும்பதனின் வீழ்துளியே வையகத்தை வாழவைக்கும்.
முசுட்டையுடன் முல்லையுமே முற்றத்தை அழகுசெய்யும்

பசுமைதரு சூழலினால் பசுமைபெறும் உயிர்களுமே
பசுமைதரும் உறவுகளின் பலத்தினிலே
இயங்கிடவே
பசுமரத்தின் ஆணியெனப் பலர்வந்து
போவார்கள்
பசுமையெனும் போர்வையது பாரெங்கும்
அழகியலாம்

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan