செல்வி நித்தியானந்தன்

நிர்மூலம்

ஊரோடு ஓடிய
அவலம்
வேரோடு அழித்த
கோலம்
சீர்ரொடு வாழ்ந்த
பந்தம்
சின்னா பின்னாய்
சொந்தம்

விரும்பி உறவுகள்
காத்து
விழிமூடா வலிகளை
சுமந்து
வானமும் மழையாய்
பொழிந்து
மண்ணும் நிர்மூலம்
ஆனது

கொத்தாய் உயிரும்
அழிப்பு
கொலையாய் இதயத்
துடிப்பு
குருதியில் உடலும்
சிதைப்பு
இறுதியாய் ஆட்சி
அறிவிப்பு

கட்டிய கல்லறைகள்
மாயம்
களவாணிகள் செயலால்
காயம்
சிங்களம் மறந்ததா
நேயம்
சீற்றத்தால் அழித்த
நிர்மூலம்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading