வரமாகும் வாய்ப்புகளே ( 751) 26.02.2026

செல்வி நித்தியானந்தன் வரமாகும் வாய்ப்புகளே இயற்கையின் கொடையில் வளமான வாய்ப்புகள் இறைவனின் படைப்பில் பிறப்புஇறப்பு நியதிகள் வாழ்வு என்பதும் வரமான...

Continue reading

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 661

தொலையாத வாழ்க்கை

துயரத்தின் செவியைப்பிடித்து வெளியேவிட்டு கதவைப்பூட்டி
துரத்திப்பிடித்து மகழ்ச்சியை வாழ்க்கையுடன் சேர்துக் கட்டி
சோதனைக்குள் சிக்காது அமைதிவேலி போட்டு
போராட்டத்தை அடக்கிவிட்டு வாழ்க்கை புன்னகை புரிகின்றது

சினத்தால் சிந்தை சிதைந்து உருக்குலையவில்லை
புத்தி செத்து அறியாமை சிறைவைக்கவில்லை
எண்ணம் உயிரோடு நல்லதை சுவாசித்தபடி
இடையூறுகளை இடைநிறுத்தி வாழ்க்கை நிம்மதியை சுமந்தபடி

பணத்தால் இன்பமென்றில்லை பசியை போக்கியது
மனம் சஞ்சலத்தை அகற்றி ஆண்டவனாகியது
உண்டாகும் ஒவ்வொரு கணங்களுமே பரிசுகளை பகிர்ந்ததன
விழுகின்ற நிழல்கூட பரம திருப்தியுடனே நகர்ந்தது

உரிமைகொண்ட ஆயுளும் பாராட்டி மகிழ்ந்து கொள்ளும்
தேகம்கொண்ட சீவனும் காலம் தந்து உறவுகொள்ளும்
வாசல் தேடிவந்தே நலமும் வரவாகிவிடும்
அர்த்தம் சொல்லும் வாழ்க்கை வரமாகிவிடும்

ஜெயம்
12-07-2023

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading