16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
ஜெயம் தங்கராஜா
கவி 666
மனிதக் கடமை
மனிதத்தை மதிக்கின்ற மனங்கள்
புனிதத்தால் உத்திக்கின்ற குணங்கள்
அன்பினால் செய்திடும் கணங்கள்
உண்மையை தாங்கிடும் தினங்கள்
அறிவின் புரிதலின் செயற்பாடு
பிரிவை தடுக்கும் உடன்பாடு
சிந்தனை செய்தால் நலத்தோடு
சிந்தையும் இருக்கும் பலத்தோடு
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில்
இருப்பின்பின் காணாத விடையில்
பயணத்தில் கற்றதைக் கொண்டு
பயன்பாட்டால் நன்மைகள் உண்டு
சந்தேகம் என்பது நரகம்
நிந்தனை செய்தே நகரும்
சந்தோஷம் என்பது சொர்க்கம்
சந்தித்தால் நிம்மதி தங்கும்
உறவுகள் இல்லையென சொல்லி
பிறரை வைக்கலாமே தள்ளி
உதவும் மனம் இல்லாதோர்
இதயம் இருந்தும் அல்லாதோர்
நல்லது கெட்டதை பகுத்தறிந்து
எள்ளையும் எட்டாக பகிர்ந்து
வாழ்ந்துதான் ஒருக்கால் பார்ப்போமே
தாழ்வில்லா வாழ்க்கையை சேர்ப்போமே
ஜெயம்
18-10-2023

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...