” மாதரின் மறுபக்கம் “
ஜெயம் தங்கராஜா
கவி 702
மனிதத்தின் நேயமே
மனித வாழ்க்கைக்கு அடிப்படையான தேவையிது
தனித்துவிடாது உயிர்களுக்கு ஆற்றும் சேவையிது
வாழ்தலின் உண்மையான அர்த்தங்கள் எவையாவன
தாழ்வில்லா சமூகத்தினை உருவாக்குதல் அவையாவன
ஓரறிவோ ஆறறிவோ அன்புடன் பழகு
பாரினிலே இதுவன்றோ உண்மையான அழகு
காக்கை குருவிகளும் எங்கள் சாதியன்றோ
காக்காவிடின் மரஞ்செடியை இல்லையங்கு நீதியன்றோ
இயந்திரங்களோடு பழகிப்பழகி இரக்கமும்தான் மறந்ததோ
இதயத்திலே மனிதந்தேய்ந்து உணர்வுகளும் மரத்ததோ
யாதும் ஊரே யாவரும் கேளிர்
வேதம் இதுதான் கொடுத்து வாழ்வீர்
பார் நிறைத்தே மக்கள் உயிரோடு
யார் யார்தான் இங்கு உயிர்ப்போடு
இறைவனைக் காணலாம் மனிதத்தின் மூலம்
இதையுணர்வோர் அடைவார்கள் வாழ்க்கையிலே அனுகூலம்
ஆண்டான் அடிமை இடைவெளிகள் அழிவங்கு
ஆண்டவரை வணங்கிவிட்டு அலகையாதல் இழிவிங்கு
ஏற்றங்கள் இறக்கங்கள் தற்காலிக நிகழ்விதுவே
மாற்றங்கொண்டால் மாந்தர்களும் மாநிலத்தின் மகிழ்வதுவே
பண்பு என்பது எல்லோரிடத்திலும் உண்டு
மண்ணிலிருக்கும் காலத்திலிதனை அறிதலும் நன்று
எண்ணத்தில் உயர்வினை உருவாக்கிக் கொண்டு
கண்ணெனக் காப்பதை காத்தலே தொண்டு
ஜெயம்
06-12-2023
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments