தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : வளர்ந்த குழந்தைகள் தாமே
27/04/2023

கள்ளமில்லா உள்ளம் கொண்ட
வள்ளல் ஆனவர்
மாசுபடா உறவு தனை
வாரி கொடுப்பவர்

நாளை வரும் பொழுதுகளை
மறந்து என்றுமே
புத்தம் புது மலர்களை போல்
பொலிவு கொண்டவர்

அடம் பிடிக்கும் ஆற்றலோடு
பிறர் மனதில் வாழ்பவர்
என்றும் இவர் இறை ஈர்ந்த
வளர்ந்த குழந்தைகள்
நம் கைகளிலே தாங்கி
கொள்ள வலிமை வேண்டுவோம்
அவர் வலிமை வேண்டுவோம்!!!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading