தங்கம் மின்னும் ஒளியாய்

நகுலா சிவநாதன்
தங்கம் மின்னும் ஒளியாய்

பொங்கும் புதுமைக் கருத்தாளம்
பொலியும் உணர்வின் உயிரோட்டம்
தங்கத் தமிழின் அணியாவும்
தமிழை வளர்க்கும் நீரோட்டம்
சங்கத் தமிழில் கவிபாடி
சாற்றும் எங்கள் தாய்த்தமிழே
வங்கம் பெருக வருவாயே
வானளாவ உயர்வாயே!

எங்கள் மொழியே தாய்த்தமிழே
ஏற்றம் பெறுவாய் வையத்திலே
பங்கம் இல்லா பாரினிலே
படர்ந்தே உயர்வாய் மேதினியில்
தங்கம் மின்னும் ஒளிபோல
தரணி சிறக்கும் செம்மொழியே
சங்கம் வளர்த்து போற்றிடவே
சான்றோர் வகுத்த நன்மொழியே

நகுலா சிவநாதன் 1820

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading