” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தங்கம் மின்னும் ஒளியாய்

நகுலா சிவநாதன்
தங்கம் மின்னும் ஒளியாய்

பொங்கும் புதுமைக் கருத்தாளம்
பொலியும் உணர்வின் உயிரோட்டம்
தங்கத் தமிழின் அணியாவும்
தமிழை வளர்க்கும் நீரோட்டம்
சங்கத் தமிழில் கவிபாடி
சாற்றும் எங்கள் தாய்த்தமிழே
வங்கம் பெருக வருவாயே
வானளாவ உயர்வாயே!

எங்கள் மொழியே தாய்த்தமிழே
ஏற்றம் பெறுவாய் வையத்திலே
பங்கம் இல்லா பாரினிலே
படர்ந்தே உயர்வாய் மேதினியில்
தங்கம் மின்னும் ஒளிபோல
தரணி சிறக்கும் செம்மொழியே
சங்கம் வளர்த்து போற்றிடவே
சான்றோர் வகுத்த நன்மொழியே

நகுலா சிவநாதன் 1820

Nada Mohan
Author: Nada Mohan