நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும் மாந்தர்கள் நாம்

நோயும் பிணியும் தொடமுன்னே
அழகாம் நொடிகளை ரசித்தெழுதி
அன்பின் கலப்பில் உணர்விழைய
அகத்துள் உறவை வளர்த்தோமா

நிலையா வாழ்வை நிலையென்று
நிமிடமும் உழைத்து ஓடாக- பிறர்
வாடிட வதங்கிட எம் பணப்பை
நிறைக்க ஓடிய மனிதர்கள் நாம்

அழையாத் தோழர்கள் அடிவருட
அனைத்து நோய்களும் அடிமை கொள்ள
விட்டவை தொட்டவை துயரெழுதி
துடித்தே மாள்வது சரிதானோ

திசையும் திருப்பமும் கணங்களுள்ளே
திருடிட முன்னே வனப்பிடுங்கள்

Nada Mohan
Author: Nada Mohan