பள்ளிப்பருவத்திலே

நகுலா சிவநாதன் பள்ளிப்பருவத்திலே பள்ளிப் பருவத்திலே பாலராய் நாம் துள்ளியோடி துயர் நீக்கிய பருவமன்றோ! அள்ளி அறிவைப் பெற்று...

Continue reading

பள்ளிப்பருவத்திலே………

இரா.விஜயகௌரி பள்ளிப் பருவத்திலே அன்று துள்ளித்திரிந்ததொரு காலம் அள்ளிப்பருகிய அறிவின் துளி கள்ளம் களைந்ததொரு கனிவின் மொழி உள்ளக்...

Continue reading

திருமணமாம்

மதிமகன்
பெற்றோர் பார்த்த திருமணமாம்
பேசிச் செய்த ஒரு மணமாம்
மற்றோரும் அதற்குச் சம்மதமாம்
மணவறையில் தான் அறிமுகமாம்!

வாழப்போவது ஏனோ இருவருமாம்
வழிமுறை வகுப்பது உறவினராம்
ஆளப்போவ தவர் அன்னையராம்
அண்ணியர் சிலரும் அடக்குவராம்

நாட்டிற்கு நாடது வேறுபடுமாம்
நாகரிகம் முன்னேற ஊறு படுமாம்!
பேட்டுக்கு பேடும் சரிவருமாம்
பேதமை என்றால்,நகை வருமாம்!

செயற்கை புத்தி என்ன தருமோ!
செத்தவரை எழுப்பி சேர்த்து விடுமோ!
இயற்கை வழமையும் தகர்ந்து விடுமோ!
இனியும் திருமணம் வாழ்ந்து விடுமோ!