மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*********அன்னையர் நாள் *******

உருக்காண உதிரம் ஈந்த
உத்தமி தான் அன்னை
பெரும் துன்பம் பல கண்டு
பெற்றெடுத்தாள் எம்மை

கருவுற்ற நாள் முதலாய்
கண்ணுறக்கம் மறந்தே
அருள் காட்டி அனுதினமும்
அல்லல் நீக்கி காப்பாள்

சருமத்தின் சளைப்பகற்றி
சங்கடங்கள் போக்கி
பெருவிருப்பில் எமை காத்து
பெருமை கொள்ளச் செய்வாள்

வரும்கால வாழ்வுக்கே
வழிகாட்டும் அன்னை
திருஉருவை தொழுதாலே
தினம் பெருகும் இன்பம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

    Continue reading