” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு —173

தலைப்பு — தொழிலாளி

காற்றையும் மழையையும் கோடை வெயிலையும்
வேற்றுமை காட்டாது வயலில் வரவேற்று
நாற்று நட்டு நற்பயிர் வளர்த்திட
சேற்றில் சோர்வின்றி செயலாற்றுவன் தொழிலாளி.

சேற்றில் நின்று ஆற்றிடும் பணியால்
சோற்றை நாம் சுவைத்து உண்பதற்கு
ஊற்றாய் உதவிடும் உயர்தொழிலாளி விவசாயி
ஏற்றமுற எல்லோரும் உதவுவோம் இணைந்து.

கல்லுக்குள் உள்ளே கடவுளுருவைக் காட்டிட
கல்லைப் பொளிந்து காட்டுகிறான் தொழிலாளி
உள்ளத்துள் உள்ளே உறைகின்ற உலகநாதனை
உள்ளபடி கண்டிடலாம் உயர்வான வழிபாட்டால்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(03/05/2022)

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading