திருவிழா

ராணி சம்பந்தர்

உழைத்துக் கழைத்தவர் மனதில்
உலகெங்கும் கழிப்பூட்டும் விழா
கோழையிலும் விழிப்பூட்டுமதில்
வாழை,தோரணம், சோடினையில்
வீதி எங்கும் அழகுப் பேரானந்தம்

அழைத்துச் செல்லும் வாழ்க்கையில்
கல்லும் கரையச் செல்லும் வழியில்
சொல்லும் பஜனை மல்லுக் கட்டும்
ஒளியோடு இருளும் சோலையாய்
அசைந்து கூவிடும் கரும்பும் ,கத்தியில்
கொத்திடும் கொத்து ரொட்டியும் ருசியிட

தண்ணீர், மோர், சர்க்கரைப் பந்தலுமோ
வெக்கையில் வடியும் வியர்வைத் தாகம்
தணித்து இறை வேட்கை பணிந்திடவே
சனமோ சனமென விலத்த முடியாத போது
கூடி அடிதொழும் அடியவரும் ஆடிப்பாடிக்
கூத்திடும் திருவிழா மகிழ்வானந்தமே .

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading