” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருவிழா

ராணி சம்பந்தர்

உழைத்துக் கழைத்தவர் மனதில்
உலகெங்கும் கழிப்பூட்டும் விழா
கோழையிலும் விழிப்பூட்டுமதில்
வாழை,தோரணம், சோடினையில்
வீதி எங்கும் அழகுப் பேரானந்தம்

அழைத்துச் செல்லும் வாழ்க்கையில்
கல்லும் கரையச் செல்லும் வழியில்
சொல்லும் பஜனை மல்லுக் கட்டும்
ஒளியோடு இருளும் சோலையாய்
அசைந்து கூவிடும் கரும்பும் ,கத்தியில்
கொத்திடும் கொத்து ரொட்டியும் ருசியிட

தண்ணீர், மோர், சர்க்கரைப் பந்தலுமோ
வெக்கையில் வடியும் வியர்வைத் தாகம்
தணித்து இறை வேட்கை பணிந்திடவே
சனமோ சனமென விலத்த முடியாத போது
கூடி அடிதொழும் அடியவரும் ஆடிப்பாடிக்
கூத்திடும் திருவிழா மகிழ்வானந்தமே .

Nada Mohan
Author: Nada Mohan