திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

திருவிழா

ராணி சம்பந்தர்

உழைத்துக் கழைத்தவர் மனதில்
உலகெங்கும் கழிப்பூட்டும் விழா
கோழையிலும் விழிப்பூட்டுமதில்
வாழை,தோரணம், சோடினையில்
வீதி எங்கும் அழகுப் பேரானந்தம்

அழைத்துச் செல்லும் வாழ்க்கையில்
கல்லும் கரையச் செல்லும் வழியில்
சொல்லும் பஜனை மல்லுக் கட்டும்
ஒளியோடு இருளும் சோலையாய்
அசைந்து கூவிடும் கரும்பும் ,கத்தியில்
கொத்திடும் கொத்து ரொட்டியும் ருசியிட

தண்ணீர், மோர், சர்க்கரைப் பந்தலுமோ
வெக்கையில் வடியும் வியர்வைத் தாகம்
தணித்து இறை வேட்கை பணிந்திடவே
சனமோ சனமென விலத்த முடியாத போது
கூடி அடிதொழும் அடியவரும் ஆடிப்பாடிக்
கூத்திடும் திருவிழா மகிழ்வானந்தமே .

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading