திருவிழா

ராணி சம்பந்தர்

உழைத்துக் கழைத்தவர் மனதில்
உலகெங்கும் கழிப்பூட்டும் விழா
கோழையிலும் விழிப்பூட்டுமதில்
வாழை,தோரணம், சோடினையில்
வீதி எங்கும் அழகுப் பேரானந்தம்

அழைத்துச் செல்லும் வாழ்க்கையில்
கல்லும் கரையச் செல்லும் வழியில்
சொல்லும் பஜனை மல்லுக் கட்டும்
ஒளியோடு இருளும் சோலையாய்
அசைந்து கூவிடும் கரும்பும் ,கத்தியில்
கொத்திடும் கொத்து ரொட்டியும் ருசியிட

தண்ணீர், மோர், சர்க்கரைப் பந்தலுமோ
வெக்கையில் வடியும் வியர்வைத் தாகம்
தணித்து இறை வேட்கை பணிந்திடவே
சனமோ சனமென விலத்த முடியாத போது
கூடி அடிதொழும் அடியவரும் ஆடிப்பாடிக்
கூத்திடும் திருவிழா மகிழ்வானந்தமே .

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading