ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

துறவு பூண்ட உறவுகள்

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2233!!
துறவு பூண்ட உறவுகள்..
உறவாகி உளம் நாடி
உயிர் கூடிப் பிறத்தல்
நறவாகி நனி சிறந்து
நலம் கோடி பெறுதல்
அறம் போல இறை
வரமாய் இணைதல்
இதனாலே குலம்
நலம் கோடி பெறுதல்..
துறவாகி துணை விலகி
துயர் சுமக்கும் நிலைகள்
உதரத்தும் உதிரத்தும்
துணை மறந்த இடர்கள்
தூரத்தே தள்ளி வைத்து
ஏனிந்த கலக்கங்கள்
புலம் பெயர்வில் புலன்
இழந்தே வாடும் நிலைகள்
இன்னும் ஏனோ கண்
இருந்தும் பார்வை இலா வறுமை..
சிவதர்சனி இராகவன்
30/10/2025

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading