துறவு பூண்ட உறவுகள்

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2233!!
துறவு பூண்ட உறவுகள்..
உறவாகி உளம் நாடி
உயிர் கூடிப் பிறத்தல்
நறவாகி நனி சிறந்து
நலம் கோடி பெறுதல்
அறம் போல இறை
வரமாய் இணைதல்
இதனாலே குலம்
நலம் கோடி பெறுதல்..
துறவாகி துணை விலகி
துயர் சுமக்கும் நிலைகள்
உதரத்தும் உதிரத்தும்
துணை மறந்த இடர்கள்
தூரத்தே தள்ளி வைத்து
ஏனிந்த கலக்கங்கள்
புலம் பெயர்வில் புலன்
இழந்தே வாடும் நிலைகள்
இன்னும் ஏனோ கண்
இருந்தும் பார்வை இலா வறுமை..
சிவதர்சனி இராகவன்
30/10/2025

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading