அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

துறவு பூண்ட உறவுகள்

நகுலா சிவநாதன்

துறவு பூண்ட உறவுகள்

உறவு என்ற பாலம்
உரிமை நாட்டும் பாலம்
பழகும் அன்பு உறவுகள்
பாரில் நிலைக்கும் வாழ்வு

துறவு பூண்ட உறவுகள்
துயர்கள் மறந்த கனவுகள்
நிறைவு காணும் மாந்தரிடம்
நிம்மதி நாட்டும் வரவுகள்

அன்பு இல்லா வாழ்வினில்
அமைதி யற்ற உறவுகளாய்
இன்பம் தொலைத்து வாழ்ந்துமே
இடர்கள் காணும் மானிடர்

பணத்தை மட்டும் குறியாக
பாதை மாறும் நம்மவர்கள்
குணத்தை மறந்து குதூகலித்து
துறவு பூண்ட தூயநல்லவர்கள்

நகுலா சிவநாதன் 1827

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading