ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

துறவு பூண்ட உறவுகள்

நகுலா சிவநாதன்

துறவு பூண்ட உறவுகள்

உறவு என்ற பாலம்
உரிமை நாட்டும் பாலம்
பழகும் அன்பு உறவுகள்
பாரில் நிலைக்கும் வாழ்வு

துறவு பூண்ட உறவுகள்
துயர்கள் மறந்த கனவுகள்
நிறைவு காணும் மாந்தரிடம்
நிம்மதி நாட்டும் வரவுகள்

அன்பு இல்லா வாழ்வினில்
அமைதி யற்ற உறவுகளாய்
இன்பம் தொலைத்து வாழ்ந்துமே
இடர்கள் காணும் மானிடர்

பணத்தை மட்டும் குறியாக
பாதை மாறும் நம்மவர்கள்
குணத்தை மறந்து குதூகலித்து
துறவு பூண்ட தூயநல்லவர்கள்

நகுலா சிவநாதன் 1827

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading