” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

துறவு பூண்ட உறவுகள்

நகுலா சிவநாதன்

துறவு பூண்ட உறவுகள்

உறவு என்ற பாலம்
உரிமை நாட்டும் பாலம்
பழகும் அன்பு உறவுகள்
பாரில் நிலைக்கும் வாழ்வு

துறவு பூண்ட உறவுகள்
துயர்கள் மறந்த கனவுகள்
நிறைவு காணும் மாந்தரிடம்
நிம்மதி நாட்டும் வரவுகள்

அன்பு இல்லா வாழ்வினில்
அமைதி யற்ற உறவுகளாய்
இன்பம் தொலைத்து வாழ்ந்துமே
இடர்கள் காணும் மானிடர்

பணத்தை மட்டும் குறியாக
பாதை மாறும் நம்மவர்கள்
குணத்தை மறந்து குதூகலித்து
துறவு பூண்ட தூயநல்லவர்கள்

நகுலா சிவநாதன் 1827

Author: