துறவு பூண்ட உறவுகள்

நகுலா சிவநாதன்

துறவு பூண்ட உறவுகள்

உறவு என்ற பாலம்
உரிமை நாட்டும் பாலம்
பழகும் அன்பு உறவுகள்
பாரில் நிலைக்கும் வாழ்வு

துறவு பூண்ட உறவுகள்
துயர்கள் மறந்த கனவுகள்
நிறைவு காணும் மாந்தரிடம்
நிம்மதி நாட்டும் வரவுகள்

அன்பு இல்லா வாழ்வினில்
அமைதி யற்ற உறவுகளாய்
இன்பம் தொலைத்து வாழ்ந்துமே
இடர்கள் காணும் மானிடர்

பணத்தை மட்டும் குறியாக
பாதை மாறும் நம்மவர்கள்
குணத்தை மறந்து குதூகலித்து
துறவு பூண்ட தூயநல்லவர்கள்

நகுலா சிவநாதன் 1827

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading