நகுலா சிவநாதன்

வளர்ந்த குழந்தைகள் தாமே

வளர்ந்த குழந்தைகள் அவர்கள்
வாடா மலர்கள் போன்றோர்
சிந்தை சிறப்பாய் வளர்ந்தாலும்
சீரிய எண்ணம் மிகுந்தவர்கள்

வீரியமாய் விளங்கும் குழந்தைகளாய்
நேரிய பார்வையும் நெடிய வனப்பும்
கூரிய எண்ணம் குவித்து நிற்பவர்கள்
வளர்ந்த குழந்தைகள் தாமே!

வண்ணத்துப் பூச்சிகளாய் வளர்ந்து நின்றாலும்
குழந்தையுள்ளம் குதூகலித்து நிற்கும்
பிறப்பின் பெருமை சிறப்பின் துலங்கலாய்
புலத்தில் உதித்தாலும் புகழாய் மிளிரட்டும்

நகுலா சிவநாதன் 1719

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading