இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நகுலா சிவநாதன்

எல்லாம் சிலகாலம்

காலங்கள் எல்லாம் சிலநாட்கள்
கனிந்திடும் திருநாளும் சிலநாட்கள்
பாலங்கள் அமைத்து வாழ்ந்தாலும்
பண்போடு வாழ்தலே பேறாகும் பெருமை

எல்லாம் சிலகாலம் நடக்கும்
ஏற்றம் ஒருநாள் வந்தேயாகும்
பல்லோர்கள் போற்ற வாழ்வதுண்டு
நல்லோராய் வாழ்வதும் சிலநாட்கள்தான்

பெருக்கும் செல்வமும் பெருமையுடன் உழைப்பும்
வருத்தி உடலை வாழ்ந்தாலும்
எல்லாம் சிலகாலம் தான்
உணர்வான வாழ்வினில் உழைப்பே மூலதனம்
உழைப்பும் சிலகாலம்தான்

எண்ணிடும் நாட்கள் எழுத்தோடு உயர்ந்தாலும்
மண்ணின் உயிர்களை நினைப்பதும் சிலகாலம்
பண்ணிய பாவங்கள் படிப்பினை தந்தாலும்
நுண்ணிய அறிவோடு வாழ்தலே சிறப்பு
எல்லாம் சிலகாலம்தான்

நகுலா சிவநாதன்1726

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading