நகுலா சிவநாதன்

எல்லாம் சிலகாலம்

காலங்கள் எல்லாம் சிலநாட்கள்
கனிந்திடும் திருநாளும் சிலநாட்கள்
பாலங்கள் அமைத்து வாழ்ந்தாலும்
பண்போடு வாழ்தலே பேறாகும் பெருமை

எல்லாம் சிலகாலம் நடக்கும்
ஏற்றம் ஒருநாள் வந்தேயாகும்
பல்லோர்கள் போற்ற வாழ்வதுண்டு
நல்லோராய் வாழ்வதும் சிலநாட்கள்தான்

பெருக்கும் செல்வமும் பெருமையுடன் உழைப்பும்
வருத்தி உடலை வாழ்ந்தாலும்
எல்லாம் சிலகாலம் தான்
உணர்வான வாழ்வினில் உழைப்பே மூலதனம்
உழைப்பும் சிலகாலம்தான்

எண்ணிடும் நாட்கள் எழுத்தோடு உயர்ந்தாலும்
மண்ணின் உயிர்களை நினைப்பதும் சிலகாலம்
பண்ணிய பாவங்கள் படிப்பினை தந்தாலும்
நுண்ணிய அறிவோடு வாழ்தலே சிறப்பு
எல்லாம் சிலகாலம்தான்

நகுலா சிவநாதன்1726

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading