பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

நகுலா சிவநாதன்

மூப்பு

காலம் செல்ல வருமே!
காற்றாய் உடலும் ஆடிடுமே!
கோலம் யாவும் மாற்றம்
கோடி அழகும் கொட்டிவிடும்
பாலம் போடும் வாழ்வு
பாதை அமைத்தும் நில்லாதது
ஞாலம் வருடும் மூப்பு
நாணி நிற்கும் ஆயுள்காப்பு

முதுமை வந்து மோதும்
முனைப்பும் ஓங்கித் தடுமாறும்
வதுவை வயதும் செல்லும்
வாழ்வில் பிடிப்பும் குறைந்திடுமே
பொதுமை பொறுமை பிறக்கும்
போட்டி இன்றி வாழ்ந்திடுக
எதையும் எண்ணி வாழா
இரக்கம் கொண்ட வாழ்வுமிங்கு!

வயதில் ஆண்டு கூடும்
வண்ணம் குறைந்து செல்லும்
பயத்தில் மனமும் ஆட்டம்
பண்பாய் வாழ உறுதிகொள்ளும்
நயத்தில் இசைவு குறையும்
நிலத்தில் வாழ்ந்தால் திருப்தியாகும்
இயக்கம் சற்று தளர
இனிமை இன்றி வாட்டமாகும்

நகுலா சிவநாதன்1657

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading