26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
” நகைப்பானதோ மனிதநேயம் “
ரஜனி அன்ரன்“ நகைப்பானதோ மனிதநேயம் “ 11.12.2025
ஏற்றத்தாழ்வுகள் அகல வேற்றுமைகளும் ஒழிய
நல்லிணக்கம் சிறக்க நியாயங்கள் பிறக்க
அமைதியை நிலைநாட்ட அமுலானதே மனிதநேயம்
இன்றோ இனம் மதம் மொழியென்று
இறுகிக் கிடக்கிறது மனங்கள்
மண்டியிடுகிறது மனிதநேயம் !
அன்பு என்பது அலங்காரப் பொருளாக
அறமென்பது வெறும் அறிக்கையாக
அனர்த்தங்களின் போது வேடிக்கை பார்ப்பது
ஒருவரின் வேதனையில் மற்றவர் சிரிப்பது
தியாகத்தின் பெருமையினைக் கொச்சைப் படுத்துவதென
சமூகவலைத் தளங்களில் பேசுபொருளாகவும்
இடர்பாடுகளிலும் நகைப்பாகுதே மனிதநேயம் !
ஆனாலும் இயற்கையின் சீற்றத்திலும் இடிபாடுகளிலும்
சிக்கித்தவித்தோரை சீக்கிரமாய் மீட்டெடுத்து
தம்முயிரையே பணயம் வைத்து உறவுகளை மீட்ட
உன்னதநேயம் மிக்கவர்களை நினைக்கையில்
இன்னமும் மனிதநேயம் உயிர்ப்போடு இருப்பதை
உணரமுடிகிறது எம்மால் !
Author: ரஜனி அன்ரன்
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...