” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

நகைப்பானதோ மனித நேயம்?

நகுலா சிவநாதன்
நகைப்பானதோ மனித நேயம்?

நகைப்பானதோ மனித நேயம்
நாளைய உலகில் வியப்பானதோ?
நீரில் அவலத்தில் நீந்திடும் உறவுகள்
வேரின் அழுகுரலாய் வெந்தணல் வேதனையில்

கடும்மழை பொழிந்து காடுமேடு உடைவு
கனமழை நீரில் வாழ்வின் அவலம்
மனித நேய உதவி விரைந்து வந்தாலும்
வழங்கலும் வலிகளும் போதாதவையே!

நகைப்புக்கு இடமேது இன்று
நலிவுற்ற மக்களை காத்திட எழுவோம்
மனித நேய உதவிகள் ஆற்றி
மாண்புடன் காப்போம் தாயக உறவுகளை

நகுலா சிவநாதன் 1833

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading