நகைப்பானதோ மனித நேயம்?

நகுலா சிவநாதன்
நகைப்பானதோ மனித நேயம்?

நகைப்பானதோ மனித நேயம்
நாளைய உலகில் வியப்பானதோ?
நீரில் அவலத்தில் நீந்திடும் உறவுகள்
வேரின் அழுகுரலாய் வெந்தணல் வேதனையில்

கடும்மழை பொழிந்து காடுமேடு உடைவு
கனமழை நீரில் வாழ்வின் அவலம்
மனித நேய உதவி விரைந்து வந்தாலும்
வழங்கலும் வலிகளும் போதாதவையே!

நகைப்புக்கு இடமேது இன்று
நலிவுற்ற மக்களை காத்திட எழுவோம்
மனித நேய உதவிகள் ஆற்றி
மாண்புடன் காப்போம் தாயக உறவுகளை

நகுலா சிவநாதன் 1833

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading