நகைப்பானதோ மனித நேயம்?

நகுலா சிவநாதன்
நகைப்பானதோ மனித நேயம்?

நகைப்பானதோ மனித நேயம்
நாளைய உலகில் வியப்பானதோ?
நீரில் அவலத்தில் நீந்திடும் உறவுகள்
வேரின் அழுகுரலாய் வெந்தணல் வேதனையில்

கடும்மழை பொழிந்து காடுமேடு உடைவு
கனமழை நீரில் வாழ்வின் அவலம்
மனித நேய உதவி விரைந்து வந்தாலும்
வழங்கலும் வலிகளும் போதாதவையே!

நகைப்புக்கு இடமேது இன்று
நலிவுற்ற மக்களை காத்திட எழுவோம்
மனித நேய உதவிகள் ஆற்றி
மாண்புடன் காப்போம் தாயக உறவுகளை

நகுலா சிவநாதன் 1833

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading