நகைப்பானதோ மனித நேயம்?

நகுலா சிவநாதன்
நகைப்பானதோ மனித நேயம்?

நகைப்பானதோ மனித நேயம்
நாளைய உலகில் வியப்பானதோ?
நீரில் அவலத்தில் நீந்திடும் உறவுகள்
வேரின் அழுகுரலாய் வெந்தணல் வேதனையில்

கடும்மழை பொழிந்து காடுமேடு உடைவு
கனமழை நீரில் வாழ்வின் அவலம்
மனித நேய உதவி விரைந்து வந்தாலும்
வழங்கலும் வலிகளும் போதாதவையே!

நகைப்புக்கு இடமேது இன்று
நலிவுற்ற மக்களை காத்திட எழுவோம்
மனித நேய உதவிகள் ஆற்றி
மாண்புடன் காப்போம் தாயக உறவுகளை

நகுலா சிவநாதன் 1833

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading