நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன்
இயற்கையின் ஈர்ப்பும்
உலகியல் வளமும்
உதவிடும் சேவையும்
நானில காப்பும்
நன்றிக்கு வித்தாய்
பெற்றோர் பேறும்
பெருநல வாழ்வும்
கற்றோர் சான்றும்
கல்விக்கு வித்தும்
ஆசான் பணியும்
நன்றிக்கு உரித்தே

எண்ணற்ற சேவைக்குள்
எத்தனை உறவுக்குள்
வண்ணமுறவே வாழ்வியல்
ஓடம் நகரும் ஒவ்வொரு துளியும்
நன்றி வித்தே

ஊடகப் பணியும்
உருவாக்கச் சிறப்பு
பாமுக பாங்கும்
பயனுறு நிகழ்வும்
ஊன்றும் வேரே
உலகியல் வானம்
உறுதியின் பீடம்
நன்றிக்கு வித்தாய்
நாளும் பொழுதும் நகருமே வாழ்வு…
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading