” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன்
இயற்கையின் ஈர்ப்பும்
உலகியல் வளமும்
உதவிடும் சேவையும்
நானில காப்பும்
நன்றிக்கு வித்தாய்
பெற்றோர் பேறும்
பெருநல வாழ்வும்
கற்றோர் சான்றும்
கல்விக்கு வித்தும்
ஆசான் பணியும்
நன்றிக்கு உரித்தே

எண்ணற்ற சேவைக்குள்
எத்தனை உறவுக்குள்
வண்ணமுறவே வாழ்வியல்
ஓடம் நகரும் ஒவ்வொரு துளியும்
நன்றி வித்தே

ஊடகப் பணியும்
உருவாக்கச் சிறப்பு
பாமுக பாங்கும்
பயனுறு நிகழ்வும்
ஊன்றும் வேரே
உலகியல் வானம்
உறுதியின் பீடம்
நன்றிக்கு வித்தாய்
நாளும் பொழுதும் நகருமே வாழ்வு…
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan