நன்றியாய் என்றுமே -2058 ஜெயா நடேசன்

அறிவை மாணவர்க்கு புகட்டி
ஆதரவாக அணைத்து கல்வி தந்து
இனிய தமிழ் இனிமையாக ஊட்டி
ஈடில்லாது அனைத்திலும் மகிழ்ந்து
உண்மை தெய்வங்களாக முன்னின்று
ஊக்கமும் நற்பழக்கங்களும் சொல்லி தந்து
எண்ணமதில் நிலை நிறுத்தி
ஏற்றுத் தாழ்வு இன்றி ஒற்றுமையாக
ஐயமது கை விடாது
ஒழுக்கமதில் ஒழுங்காக ஊட்டி
ஓய்வின்றி அயராது உழைத்து
ஒளவைப் பாட்டியின் அற மொழிகள் படித்து
அ.தா நாட்டிற்கு உகந்த ஆசிரிய மணிகளை
நாம் என்றும் நன்றியாக போற்றி புகழ்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading