நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

நினைவுகள் கனக்கிறதே

ரஜனி அன்ரன் ( B.A) “நினைவுகள் கனக்கிறதே” 27.11.2025

தலைகுனிந்த எம்மினத்தை
தலைநிமிரச் செய்து தன்மானத்தோடு நாம்வாழ
தம்முயிரை ஈகம்செய்த தேசமறவர்களின்
தியாகநினைவுகள் நெஞ்சோடு கனக்கிறதே
நினைவுகளும் மலர்கிறதே !

தமிழ்வாழ இனம்வாழ
தம்முயிரைக் கொடையாக்கி
உடலை வெடியாக்கி உணர்வைப் பொறியாக்கி
வித்தாகிப் போனவரின்ஒலி
மண்ணின்மார்பில் வலியாகத் துடிக்கிறதே
விண்கூட மழைப்பூவைச் சொரிகிறதே
கண்களில்நீரும் பனிக்கிறதே !

காற்றிலும் சேற்றிலும் கடுங்குளிரிலும்
ஊற்றாகிப் போனவரின் உயிர்த்தியாகம்
இனத்தின்அரணாக இன்னும் உயிர்ப்போடுதான்
மண்ணில் விழுந்த உம்வேர்கள் மரபாக உயர்கிறது
நாளைஎழும் தலைமுறைக்கும் அறமாக உரைக்குமே
எல்லைகள் கடந்தும் எம்உணர்வோடு கலந்துவிட்ட
உன்னதர்களின் நினைவுகள் கனக்கிறதே மனசெல்லாம் !

வசந்தா ஜெகதீசன் கார்த்திகை இருபத்தியேழு... கணதியின் ரணமாய் கங்கையில் விழியாய் கோரமே நினைவாய் கொன்றழிப்புகள் நிதமாய் வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே கார்த்திகை...

Continue reading