” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

நிழலாடுதே நினைவாயிரம்……

“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026

காலத்தின்சுவடுகள் காத்திரமான பொக்கிஷங்கள்
காலப்பெட்டகத்தின் சித்திரங்கள் நினைவுகள்
நினைவுகள் ஆயிரமாய் நெஞ்சினில் நிழலாட
நினைவுகள் சிலவோ மருந்தாக
நினைவுகள் பலவோ ஆறாதகாயமாக
ஆழ்மனதில் புதைந்திருக்க
நினைவெல்லாம் சிறகடிக்குதே தாய்நிலம் நோக்கி !

சொந்தங்கள் சூழ்ந்த சுகமானகாலம்
அறுவராய்க்கூடி வாழ்ந்தகாலம்
அடிபட்டுஉண்டு மகிழ்ந்தகாலம்
பண்டிகை விழாக்கள் என்றால்
வீடேகலகலக்கும் விழாக்கோலம் பூண்டிருக்கும்
சிர்ப்பிற்கு பஞ்சமில்லை கவலைக்கும் இடமில்லை
பணம்குறைந்தாலும் பாசத்திற்கு குறைவேயில்லை
நிழலாடுதே நெஞ்சினில் நினைவுகள்ஆயிரமாய் !

இன்று எல்லோரும் வாழ்க்கையின் பிணைப்பில்
நான்குதிசைகளிலும் திசைமாறிய வாழ்வு
ஆனாலும் ஒன்றுகூடுவோம் – எனும்
நம்பிக்கையில் தொடர்கிறது வாழ்வு !

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading