நீங்கா நினைவு (729) 18.09.2025

செல்வி நித்தியானந்தன்
நீங்கா நினைவு

நல்லூர் முன்றலிலே
நாலா பக்கமும்
நல்லுறவுகள் புடைசூழ
நடந்ததோர் நிகழ்வாய்

பெரியவர் சிறியவர்
பெருங் கண்ணீராய்
பெய்த மழையும்
பெருமித பெருமையாய்

ஏழுஇரண்டு நாளாய்
எண்ணமும் ஒன்றாய்
எழிலே சரீரமாய்
எழுந்த தீர்வாய்

அம்சங்கள் ஐந்துமே
அமைதியாய் போய்விடவே
ஆண்டும் பலவாய்
ஆனதே இழப்பாய்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading