“நீளட்டும் வீச்சம்”

நேவிஸ் பிலிப் கவி இல (454)

வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி எம்
வாசல் தொடும் பா முகம்

வரை முறை கடந்து
புது யுகம் படைத்திட
ஆறுக்கும் கீழாகி அறுபதுக்கும்
மேலான அகவையுடையோரும்
கற்கும் கலைக் கூடம்

தன்னலமில்லா மனமும்
அன்பே குணமுமாய்
இன் சொல்லே எந்நாளும்
உன்னில் இருந்து கிளம்பும்
பாங்கில் தளும்புதே சிநேகம்

நேற்றும் இன்றும் நாளையுமாய்
எம்மோடிணையும் வானொலியே,
பாமுகமே ,என்னவென்று
நன்றி சொல்ல?
நேசிக்கின்றேன் நீ வாழ்கவென
ஆசிக்கிறேன்.

Nada Mohan
Author: Nada Mohan