” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“நீளட்டும் வீச்சம்”

நேவிஸ் பிலிப் கவி இல (454)

வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி எம்
வாசல் தொடும் பா முகம்

வரை முறை கடந்து
புது யுகம் படைத்திட
ஆறுக்கும் கீழாகி அறுபதுக்கும்
மேலான அகவையுடையோரும்
கற்கும் கலைக் கூடம்

தன்னலமில்லா மனமும்
அன்பே குணமுமாய்
இன் சொல்லே எந்நாளும்
உன்னில் இருந்து கிளம்பும்
பாங்கில் தளும்புதே சிநேகம்

நேற்றும் இன்றும் நாளையுமாய்
எம்மோடிணையும் வானொலியே,
பாமுகமே ,என்னவென்று
நன்றி சொல்ல?
நேசிக்கின்றேன் நீ வாழ்கவென
ஆசிக்கிறேன்.

Nada Mohan
Author: Nada Mohan