மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

நேவிஸ் பிலிப் கவி இல(148) 26/09/24

“மனிதம் மலரட்டும்”
நீதி நேர்மை நிலவிட
நாட்டில் ஒற்றுமை ஓங்கிட
ஏற்றத் தாழ்வற்ற கல்வி முறை
பாரா பட்சமின்றி சமத்துவமாக

இன மத மொழி வேற்றுமையின்றி
மதங்களைப் போற்றி
நட்புறவுடன் வாழந்திட
உண்மை அன்புறவில்
ஊரெல்லாம் இணைந்திட

பஞ்சம் நீங்கிட
தொழில் வளம் பெருகிட
பசி வறுமை பட்டனி அகல
மனித மனங்கள் மகிழ

லஞ்சம் வஞ்சமேதுமில்லா
கள்வர் கயவர் குற்றமில்லா
போதையும் நோயும் ஒழிய
நன்னெறி ஆட்சி கண்டு
மனிதம் மலரட்டும்,.

நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

    Continue reading