ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

பட்டமரத்தில் ஒற்றைக்குருவி-68

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-04-2025

பட்டமரத்தில் ஒற்றைக் குருவியின்
பரிதாபக் கதை கேட்டாயோ..
பாழாய்ப் போன குண்டுமழையால்
பட்டமரமும் விட்டதாயும் அறிவாயோ?

பச்சைக் காய்கறி கனிகளும்
பசுஞ்சோலையும் கண்டாயோ
பள்ளி சிறாரும் வீடுமாய்
பாடி திரிந்த காணியிதுவாய்

காணிக்காரன் என்தாயை
குடும்ப உறவாய் பார்த்தானல்லோ
மாம்பழம் கொத்தி தாய் உண்ண
மகிழ்ந்து ரசித்தானல்லோ

முட்டையில் வெளிவந்த எனக்கு- தாய்
முதல் சொன்ன கதையிதுவல்லோ
முத்தான காணிகாரர் எவரையும் காணீரே
முறையிடக் கேட்க யாருமில்லையே…

போனமாதம் வந்த சின்னப்பையனவன்
பேரதிர்ச்சியாய் பார்த்தான் என்னை
பேரப்பயலாய் இருப்பானோ இவன்
பெரியவரின்ர சாயலும் தெரியுதல்லோ!

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading