பட்டமரத்தில் ஒற்றைக்குருவி-68

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-04-2025

பட்டமரத்தில் ஒற்றைக் குருவியின்
பரிதாபக் கதை கேட்டாயோ..
பாழாய்ப் போன குண்டுமழையால்
பட்டமரமும் விட்டதாயும் அறிவாயோ?

பச்சைக் காய்கறி கனிகளும்
பசுஞ்சோலையும் கண்டாயோ
பள்ளி சிறாரும் வீடுமாய்
பாடி திரிந்த காணியிதுவாய்

காணிக்காரன் என்தாயை
குடும்ப உறவாய் பார்த்தானல்லோ
மாம்பழம் கொத்தி தாய் உண்ண
மகிழ்ந்து ரசித்தானல்லோ

முட்டையில் வெளிவந்த எனக்கு- தாய்
முதல் சொன்ன கதையிதுவல்லோ
முத்தான காணிகாரர் எவரையும் காணீரே
முறையிடக் கேட்க யாருமில்லையே…

போனமாதம் வந்த சின்னப்பையனவன்
பேரதிர்ச்சியாய் பார்த்தான் என்னை
பேரப்பயலாய் இருப்பானோ இவன்
பெரியவரின்ர சாயலும் தெரியுதல்லோ!

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading