” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பட்டமரத்தில் ஒற்றைக்குருவி-68

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-04-2025

பட்டமரத்தில் ஒற்றைக் குருவியின்
பரிதாபக் கதை கேட்டாயோ..
பாழாய்ப் போன குண்டுமழையால்
பட்டமரமும் விட்டதாயும் அறிவாயோ?

பச்சைக் காய்கறி கனிகளும்
பசுஞ்சோலையும் கண்டாயோ
பள்ளி சிறாரும் வீடுமாய்
பாடி திரிந்த காணியிதுவாய்

காணிக்காரன் என்தாயை
குடும்ப உறவாய் பார்த்தானல்லோ
மாம்பழம் கொத்தி தாய் உண்ண
மகிழ்ந்து ரசித்தானல்லோ

முட்டையில் வெளிவந்த எனக்கு- தாய்
முதல் சொன்ன கதையிதுவல்லோ
முத்தான காணிகாரர் எவரையும் காணீரே
முறையிடக் கேட்க யாருமில்லையே…

போனமாதம் வந்த சின்னப்பையனவன்
பேரதிர்ச்சியாய் பார்த்தான் என்னை
பேரப்பயலாய் இருப்பானோ இவன்
பெரியவரின்ர சாயலும் தெரியுதல்லோ!

Jeba Sri
Author: Jeba Sri