பட்டமரம்

ஜெயம்
ஒரு காலத்தில் அழகின் ஆட்சி
உறுமாறியே இப்போ அசிங்கமாய் காட்சி
கூடுகட்டி பறவைகள் வாழ்ந்ததொரு காலம்
தேடுவாரற்று மொட்டையாய் இன்றைய கோலம்

துள்ளிவந்து ஏறும் சிறுவர்கள் கூட
தள்ளிவைத்தே போனார் வேறிடம் விளையாட
சுட்ட வெய்யிலுக்கு ஒதுங்கிடும் கூட்டம்
பட்டமரமென்று நிழல்தரா மரமென ஓட்டம்

கட்டுடலை தாங்கியே பசுமையை சுமந்தது
வெட்டியதை எரிக்க நிலைமையும் அமைந்தது
தளிர்க்காது கிடக்கும் கிழட்டு மரம்
இழந்து பலத்தை தவிக்கும் மரம்

உயர்ந்த மரமும் உக்கிய வேரும்
பயணற்றுப் போனாலே இதுபோலவே யாரும்
படிப்பினை ஊட்டும் பட்டமரக் கதை
முடிவு மரமென்ன மானிடர்க்கும் வதை

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading